நிறுவனர்: மாசிலாமணி | BA பட்டதாரி | திருப்பூர், கோட்டைக்காடு
கல்வியின் அவசியத்தை அறிந்த பிஏ பட்டதாரியான மாசிலாமணி, கல்லாத பலருக்கு வாழ்க்கை துயரத்திற்கும் துன்பத்திற்கு மாறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இமயம் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.
கடந்த 17 ஆண்டுகளாக சிறுவர் சிறுமிகளுக்கு இலவச சேவையில் ஈடுபட்டு, ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடத்திற்கு நேரில் சென்று வேலைக்கு செல்லும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை படிக்க வைக்கும் உன்னதமான சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.
கடவுள் வாழ்கிறான் அவன் கருணையில் நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் - கருணை கொண்ட உள்ளத்தை கடவுள் இருக்கும் கோயில் என்கிறார் கவிஞர்.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கட்டாய கல்வி பிரச்சாரம்.
குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு கல்வி கற்க வைக்கும் சமூக சேவை.
மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள், முதியோர்களுக்கு இலவச மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்குதல்.
கல்வி, உணவு, தொழில் பயிற்சி என பல்வேறு துறைகளில் சமுதாயத்திற்காக அர்ப்பணிப்புடன் இயங்குகிறோம்.
ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குதல். பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளித்தல்.
DTP, Java, C++, Corel Draw, Visual Communication போன்ற கணினி பாடநெறிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள், முதியோர்களுக்கு நாள்தோறும் இலவச மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்குதல்.
குழந்தைகளுக்கு இலவச கராத்தா பயிற்சி அளித்தல்
முதியவர்களுக்கு மாலை நேர கல்வி சேவை
தொழிலாளராக உள்ள குழந்தைகளை மீட்டு கல்வி கற்க வைத்தல்
கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு குறும்படம் தயாரிப்பு
நிறுவனர் & மேலாண்மை இயக்குனர்
திருப்பூர் கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி, ஏழை எளிய மக்களின் வாழ்வைக்காக தன்னையே அர்ப்பணித்தவர். கல்வியின் அவசியத்தை அறிந்த அவர், கல்லாத பலருக்கு வாழ்க்கை துயரத்திற்கும் துன்பத்திற்கு மாறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தனது லட்சியமாக ஏற்றுக்கொண்டார்.
"கல்லாதவருக்கு கல்வி, இல்லாதோருக்கு உணவு - இதுவே எங்கள் அடிப்படை நம்பிக்கை. கல்வி என்பது மாற்றத்தை உருவாக்கும் மிகப்பெரிய மனித உரிமை."
அவரது சத்தமில்லாத சாதனைகளை அறக்கட்டளையின் சார்பில் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார். கல்வி விழிப்புணர்வு, குழந்தைகள் கட்டாய கல்வி, இலவச கணினி பயிற்சி, கராத்தா பயிற்சி, முதியோர் மாலை நேர பாடசாலை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இமயம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள், ஆதரவற்ற முதியோர்களுக்கு நாள்தோறும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடிச்சென்று இலவசமாக மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கும் மனிதநேய நிகழ்ச்சி திட்டம் தொடக்க விழா.
இமயம் அறக்கட்டளை
கல்வித் துறையில் செய்த சிறப்பான சாதனைகள், அர்ப்பணிப்பு மற்றும் முன்னுதாரணமான பங்களிப்புகளுக்காக, இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த மதிப்பிற்குரிய விருது, டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் கல்விச் சேவை சிறப்பு விருது - 2026 என்ற பெயரில், அவரது கல்வி, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான கொள்கைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இந்த ஊக்கமளிக்கும் பயணம், டாக்டர். அம்பேத்கரின் காட்சியைப் பிரதிபலிக்கிறது — தனிநபர்கள் மற்றும் சமூகங்களை அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் சமூக சேவையின் மூலம் ஊக்குவித்தல்.
சமூக அதிகாரமளித்தல், சமூக நீதி மற்றும் தேசிய கட்டுமானத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பிற்கு வெப்பமான வாழ்த்துகளையும், ஆழமான மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் சிறிய நன்கொடை ஒரு குழந்தையின் வாழ்க்கையை மாற்றும். இன்றே இணையுங்கள்!